Posts

Showing posts with the label சித்தர்கள்

குதம்பை சித்தர் பாடல்

Image
குதம்பை சித்தர்  தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர்  குதம்பைச்சித்தர் .                                                                           குதம்பை சித்தர் பாடல்   பூரணங் கண்டோர்இப் பூமியிலேவரக்       காரணம் இல்லையடி குதம்பாய்       காரணம் இல்லையடி. போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்       சாங்காலம் இல்லையடி குதம்பாய்       சாங்காலம் இல்லையடி. செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்கு       முத்திதான் இல்லையடி குதம்பாய்       முத்திதான் இல்லையடி. வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்       கஸ்திசற்று இல்லையடி குதம்பாய்       கஸ்திசற்று இல்லையடி. பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்       குற்றங்கள் இல்லையடி குதம்பாய்       குற்றங்கள் இல்லையடி. காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்       சூட்சியாய்ப் பார்ப்பாயடி குதம்பாய்       சூட்சியாய்ப் பார்ப்பாயடி. வெட்டவெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை       இட்டமாய்ப் பார்ப்பாயடி