Posts

Showing posts with the label சிவம்

மாத சிவராத்திரி

Image
சிவராத்திரி  வணக்கம் மக்களே !! இன்னைக்கு(15-அக்-2020) சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள்,மாத சிவராத்திரி.  மாத சிவராத்திரி என்பது ஒவ்வொரு மாதமும் சிவனாரை வழிபடும் சிறப்பானது நாள். இந்நாளில் சிவனை வழிப்பட்டால் சிக்கல்களும் இன்னல்களும் தீரும். கஷ்டங்களும் கவலைகளும் காணாமல் போகும் என்பது உறுதி. மாதந்தோறும் முருக பெருமானுக்கு சஷ்டி போல,பெருமாளுக்கு  ஏகாதசி போல, சிவபெருமானுக்கு  சிவராத்திரி வரும். சிவனை வணங்குவதற்கு உரிய அற்புதமான நன்னாள். இந்தநாளில், சிவராத்திரி விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். சிவநாமம், ருத்ரம், சிவகவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்வார்கள். இந்த முறை, இன்று 15.10.2020  மாத சிவராத்திரி. இந்த அற்புதமான நாளில், காலையும் மாலையும் சிவனாரை வழிபடுங்கள். தேவாரத் திருவாசகம் படித்து வேண்டிக்கொள்ளுங்கள்.சிவ சிந்தனையில் எல்லா காரியங்களையும் செய்யுங்கள்.  பதிகம் பாராயணம் செய்து பரமனைத் தொழுவது பல உன்னதங்களைத் தந்தருளும். அதேபோல், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரதோஷம் வரும். அமாவாசைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் பெளர்ணமிக்கு மூன்றுநாட்களுக்கு முன்னதாக

சிவன் பற்றிய விளக்கம்

Image
 சிவபெருமான்  சிவன் உடலையும் உயிரையும் இயக்கத்தையும் குறிக்கிறது.இது சிவன் வாழ்க்கை சிவன் வாழ்க்கைக்கு ஆற்றல் சிவன் அனைத்தையும் உள்ளடக்கியது. உலகளாவிய ஆன்மா அல்லது நனவு என்ற ஆழமான புரிதலுக்கு இது நம்மை அழைத்துச் செல்கிறது. இந்த சிவ தத்துவத்தை உணர்ந்துகொள்வது ஆனந்தம் அல்லது பேரின்பத்திற்கு வழிவகுக்கிறது.    சிவனின் விளக்கம் மூன்று  நிலைகள் : ஆதி - அந்தம் : தொடக்கம் மற்றும் முடிவு  சங்கோச்சா - விஸ்தாரம் : அணு முதல் அண்டம்   பிரசரணம் - அபிரசரணம் : பரவி கூடுதல்  சிவன் விளக்கத்தின் மூலம் : " शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेयः " விழித்திருத்தல், கனவு காண்பது மற்றும் தூங்குவது ஆகிய மூன்று நிலைகளுக்கு அப்பாற்பட்ட அந்த நிலை, அவை அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் சிவம் எது, அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்.எல்லா உயிர்களும் சிவமாகிய ஆரம்பத்திற்கே திரும்ப செல்கிறது.  சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று நிலைகளில் உள்ளார். அருவுருவமாக லிங்க வடிவவுமும் , மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவத்திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன. தென்னாட