SaiBaba - சாயிபாபா பொன்மொழிகள்

  சாய் பாபா

                                                                             





ஷிர்டி சாய் பாபா என்றும அழைக்கப்படுபவர், ஒரு இந்திய ஆன்மீக துறவி ஆவார், அவர் தனது பக்தர்களால் ஸ்ரீ தத்தகுருவின் வெளிப்பாடாக கருதப்படுகிறார், மேலும் ஒரு ஃபாகிர் என அடையாளம் காணப்படுகிறார். அவர் தனது இந்து மற்றும் முஸ்லீம் பக்தர்களால் போற்றப்படுகிறார்.


மதம் அல்லது சாதி அடிப்படையில் அனைத்து துன்புறுத்தல்களையும் சாய் பாபா எதிர்த்தார். அவர் கிறிஸ்தவ, இந்து மற்றும் முஸ்லீம் - மத மரபுவழியை எதிர்த்தவர்.நீங்கள் தாகமுள்ளவர்களுக்கு தண்ணீர், பசித்தவர்களுக்கு ரொட்டி, நிர்வாணத்திற்கு உடைகள், உங்கள் வராந்தாவை அந்நியர்களுக்கு உட்கார்ந்து ஓய்வெடுப்பதற்காக வழங்கினால் ஸ்ரீ ஹரி (கடவுள்) நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார். யாராவது உங்களிடமிருந்து ஏதேனும் பணத்தை விரும்பினால், நீங்கள் கொடுக்க விரும்பவில்லை என்றால், கொடுக்க வேண்டாம், ஆனால் அவரை ஒரு நாய் போல குரைக்காதீர்கள்.

                                                            



ஷிரடி சாயிபாபா  பொன்மொழிகள் :

1. ஸ்ரீரடி ஸ்தலத்தை எவன் மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடந்து செளகரியத்தை அடைகிறான்.

 

2. துவாரகா மாயியை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு உள்ளவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடவார்கள்.

 

3. இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் வேலை செய்வேன்.

 

4. என்னுடைய சமாதி என் பக்தர்களுக்கு அநேக ஆசீர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்.

 

5. என்னுடைய பூத உடல் என் சமாதியிலிருந்து பேசும்.

 

6. என்னுடைய சமாதியிலிருந்து கொண்டே நான் மிகவும் சுறுசுறுப்பாகவும், தீவிரமாகவும் இருப்பேன்.

 

7. என்னிடன் வருபவர்களுக்கும், என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும், நான் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.

 

8. நீ என்னை அடைந்தால் நான் உன்னை கடாஷிக்கிறேன்.

 

9. நீ என் பேரில் உன் பளுவை சுமத்தினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.

 

10. நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன்.

 

11. என்னுடைய, பக்தர்களுடைய வீட்டில் ஒரு போதும் தேவை என்பதே இருக்காது.


#Saibaba #Sai #Baba #PlipPlipBlogs
Blogs By PlipPlipBlogs

Comments